ராதிகா ரைத்தா

என்னடா இது என்று நீங்கள் யோசிக்கக்கூடும் என்பதால்  முதலிலேயே சொல்லி விடுகிறேன். ‘ரைத்தா’ என்பது ஒரு உணவுப் பொருள் : தயிர்ப் பச்சடியின்  வட நாட்டு  வடிவம். ராதிகா? என்னுடைய அன்புக்குரிய உறவினர்  ஸ்ரீரங்கம் விச்வநாதனின் அன்புக்குரிய மனைவி. என்னுடைய மருமகள் என்று சொன்னால் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு விடும். அதனால் மகள் என்றே சொல்கிறேன். கடந்த வாரத்தின் இறுதி நாட்களை அவர்கள் வீட்டில் செலவிட்டேன். தமிழ்நாடு வாசகர் வட்டத்தின் திருச்சி மாவட்ட கிளை துவக்க விழா, டிசம்பர் 16, 2012 அன்று நடை பெற்றது. அதைப் பற்றிய விவரங்களை இங்கே எழுதி உங்களைச் சோதிப்பதாக இல்லை. இது ரைத்தா பற்றித்தான். கொஞ்சம் ராதிகாவைப் பற்றியும்.  “ நீ விஜயகாந்த் மாதிரி இருக்கேம்மா” என்று சொல்வேன், பதிலுக்கு அந்தப் பெண் கண்களை அகல விரித்து, விழிகள் வெளியே விழுந்து...

அமானுஷ்யம்

ஒரே ஒரு அமானுஷ்யம்.பயந்த சுபாவம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம். இடம்: நாகப்பட்டினத்து லாட்ஜ் . வருடம்: 1980. அந்த லாட்ஜில் ஒரு வசதி உண்டு. ஒரு ரூ வாடகைக்கு லாட்ஜ் வராந்தாவில் படுத்துக்கொள்ளலாம். ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தால் பாய் , தலையணையும் கொடுப்பார்கள். ஆனால் விளக்கை அனைத்து விட்டுத்தான் படுக்கை போடவேண்டும். வெளிச்சத்தில் தலகானியைப் பார்த்து விட்டால் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வரும்.இப்படியும் சில வாரங்கள் இருந்தேன்... ஒரு நாள் இரவில் கேரளக் காரர் ஒருவர் `சார் நீங்கள் என் அறையில் படுக்கலாம்` என்றார். ஓரளவுக்கு மறுத்துவிட்டு அப்புறம் உள்ளே போய்விட்டேன்.அவர் கட்டிலில். நான் கீழே. அவருடைய பழைய டிரங்குப் பெட்டி என் அருகே. விளக்கு அணைக்கப்பட்டது.மனித நடமாட்டம் இல்லை.கடல் ஓசை மட்டும் காதில் கேட்கிறது. தூக்கம் வரவில்லை.அந்த அறையில் இரண்டு பேர்தான்...

முகுந்தா முகுந்தா - கமல் இல்லை

முகுந்தா 2 : வீட்டில் தொலைபேசி ஒலித்தது.முகுந்தா எடுத்தான். யாரோ ஒருவர் தவறான நம்பரை டயல் செய்துவிட்டு படபட என்று பேசினார்.`சுந்தரம் பினான்ஸ் தானே. நீங்கள் எப்படி செக்கை கிராஸ் செய்யாமல் அனுப்பலாம்? ரிசர்வ் பேங்க் ரேகுலஷன் படி இது தப்பு` என்று இடைவெளி இல்லாமல் பேசிக் கொண்டே போனார். மொத்தத்தையும் கேட்ட முகுந்தா `சார், கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா நாம அட்ஜஸ் பண்ணிக்கறது நல்லது.சின்ன விஷயங்களைப் பெரி சு பண்ணக் கூடாது` என்கிற ரீதியில் சமாதானம் செய்தான். ஒரு கட்டத்தில் அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. `நீங்க என்ன சொல்றீங்க , அது சுந்தரம் பினான்ஸ் இல்லையா?` என்று குரலை உயர்த்தினார். முகுந்தா இதற்காகத்தான் காத்திருந்தது போல ` சார். இது எங்க வீடு.ஆனா யோசிச்சுப் பாருங்க.நா சொன்னது வாழ்கையில உங்களுக்குப் பயன்படும்` என்றான்.அந்தப் பக்கத்தில் இருந்து...