சூது ஜவ்வும்

எந்த வேலை எப்படி இருந்தாலும், வெயில் வழக்கம்போல ஓவராக இருந்தாலும், விடுமுறைக்கு வந்த விருந்தினர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உட்னே இப்பட்த்தைப் பர்த்து விடுங்கள். இல்லாவிட்டால் யாராவது ஒருவர் பர்த்துவிட்டு வந்து, “ நீ சாப்பிடுவது இட்லி இல்லை என்பதை சட்னி கூட நம்பாது என்று ஆரம்பித்து விடுவார். உங்க்ளை போன்று ஒருவர் அல்லது இருவர்தான் பாக்கி. 
முதல் மார்க் இயக்குனர் நலன் குமாரசாமிக்கு. எந்த காரெக்டரயும் கெளரவமாக, சீரியஸாக்க் காட்டக் கூடாது  என்ற வைராக்யத்தோடு படம் எடுத்திருக்கிறார். நிதியமைச்சராக வரும் திரு எம் எஸ் பாஸ்கர் மட்டும் எப்படியோ தப்பித்து விட்டார். 
குருட்டுத்தனமான முட்டாள்தனம், முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் அவசியம் என்று சொல்லி, கட்த்தல் தொழிலுக்காக்க் கரும்பலகையோடு வகுப்பு எடுக்கும் விஜய் தேதுபதி தன்னுடைய அதிரடித் திட்டங்களால் தியேட்டரில் சிரிப்பலைகளை எழுப்புகிறார்.
அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்த வேண்டுமா, கூப்பிடுங்கள் ராதரவியை என்று சொல்ல்லாம்.ஊழல் என்ற பெட்ரோலில்தான் அரசியல்வாதிகளின் வண்டி ஓடுகிறது என்பதை எத்தனை வார்த்தைகளில் , எத்தனை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்துகிறார் !
தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்கள் போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, மேசையைத் துக்கி அடிப்பது, லாக் அப் கம்பிகளை பல்லால் கடித்து வளைப்பது போன்ற காட்சிகளைப் பர்ர்த்து  சலித்துப் போனவர்களுக்கு, இன்ஸ்பெக்டர் பிரம்மாவாக வரும் யோக் ஜெப்பி ஒரு அசால்ட்டான  அறிமுகம். போலிசிடம்  கேடிகள் அடி வாங்குவதை ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்கள். இது காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். 
இத்தகைய சுவாரஸ்யங்கள் இருந்தும் , எதிர்பாராத நேரங்களில் காமிரா
சங்கீதா ஷெட்டியின் தங்கமான அங்கங்களை விட்டு நகர மாட்டேனென்கிறது.  கவர்ச்சிக்கு மிஞ்சிய இட்த்தில்தான் கடை ஓட்டம்.
இம்மாம் பெரிய தேவி தியேட்டரில் 10 சீட் தான் காலியிருந்த்து. பக்கத்து சாந்தி தியேட்டரில் , “ மூன்று பேர் மூன்று காதல் “ திரைப்பட்த்திற்கு 10  சீட் தான் நிரம்பி இருந்த்து. 
அதெல்லாம் சரி, நல்லாயிருக்கிற திரைப்பட்த்திற்கு “சூது ஜவ்வும்  “ என்று தலைப்பு வைத்து விமரிசனம் செய்வானேன் என்று கேட்கிறீர்களா? நல்ல கேளிதான். இதுகூட இயக்குனர் நலன் குப்புசாமியிடமிருந்து கடன் வாங்கியது தான். தேவையில்லாமல் அதிர வைப்பது அவரது டெக்னிக்.