லண்டன் ராணி


காலையில் கிருஷ்ணன் என்ற போஜனப் ப்ரியனை
அறிமுகப் படுத்தினேன். அதே வகையில் இன்னொரு
என்ட்ரி ராணி ஸ்ரீனிவாசன். திடீரென்று போனில்
கூப்பிட்டு` வீட்டு சாப்பாடு, வீட்டுச் சாப்பாடு- இதில்
எது சரி ` என்று கேட்பார். நான் இலக்கணப் புலவன்
இல்லை என்று பலமுறை சொன்னாலும் இந்தப்
பெண்ணுக்குப் புரியவில்லை. நல்ல உழைப்பாளியான
இவர் கடந்த சில வருடங்களாக லண்டனில் இருக்கிறார்.
ஹோடேலில் வேலை.ஏதோ மேல்படிப்பும் உண்டு.
அதெல்லாம் நமக்குப் புரியாத விஷயம்.

லண்டனில் யாராவது தமிழ் இலக்கியக் கூட்டம் போட்டால்
இவர் அங்கே ஆஜராகிவிடுவார். இதில் என்ன சேதி இருக்கிறது
என்கிறீர்களா? ராணி வெறும் கையோடு போக மாட்டார்.
கையில்` திராவிட மாயை `புத்தகம் இருக்கும்.இந்தியாவில்
தப்பித்தவர்கள் இங்கிலாந்தில் மாட்டிக்கொள்கிறார்கள். ராணிக்கு
நான் ஏன் முக்யத்வம் கொடுக்கிறேன் என்று புரிகிறதா?

லண்டன் போன புதிதில் ராணியை ஒரு வெள்ளைக்காரன்
பின்தொடர்ந்திருக்கிறான்.ராணிக்கு பாதி குளிரில் ,பாதி
பயத்தில் நடுக்கம். வழியில் தென்பட்ட போலிஸ்காரரிடம்
கம்ப்ளைன்ட் செய்திருக்கிறார். போலீஸ்காரர் வீடு வரை
கூடவே நடந்து வந்தாராம். வெள்ளைக்காரனை எதுவும்
செய்யவில்லையாம். வீடு வந்தபிறகு போலீஸ்காரர்
`rani, you are new to england.soon you will love it` என்று சொன்னாராம்.

ராணிக்கு நாட்டுப் பற்று குறைந்து விடுமோ என்பதுதான்
என்னுடைய கவலை.

1 comments:

latha said...

amanushiam is very interesting. i wanted to know more about manthrigam.

Post a Comment