கடையில் உள்ள கருணாநிதி


மொத்த சோவியத் ரஷ்யாவும் ஸ்டாலின் பிடியில்
சிக்கியிருந்த நேரம் அது. நாட்டு நிலைமையை அறிவதற்காக
ஒரு நாள் மாலையில் ஸ்டாலின் மாறுவேஷத்தில்
புறப்பட்டார். ஒரு புத்தகக் கடைக்குப் போனார்.

எந்தப் பக்கம் பார்த்தாலும் ஸ்டாலின் எழுதிய
புத்தகங்கள், ஸ்டாலின் பற்றிய புத்தகங்கள்,
ஸ்டாலின் படம் போட்ட வாழ்த்து அட்டைகள்.
ஸ்டாலின் படத்தோடு பூங்கொத்துகள் நிரம்பியிருந்தன,
கஷ்டப்பட்டு தன்னுடைய சந்தோஷத்தை அவர்
அடக்கிக்கொண்டார்.

குரலைத் தாழ்த்திக்கொண்டு கடைகாரரிடம் கேட்டார்.
`லெனின் எழுதிய புத்தகம் இல்லையே, ஏன்? ` என்றார்.
`அதெல்லாம் விற்று விட்டது` என்றார் கடைக்காரர்...

நேற்று, சென்னை ஹிக்கின்போதொம்ஸ் கடைக்குப்
போனேன். சீனி விஸ்வநாதனின் `கால வரிசைப்படுத்தப்பட்ட
பாரதியார் கவிதைகள்` கேட்டேன். `விற்றுவிட்டது` என்று
சொல்லப்பட்டது. ஸ்டாலின் குணசேகரனின் `விடுதலை
வேள்வியில் தமிழகம்` கேட்டேன். `விற்று விட்டது` என்ற
பதில் வந்தது. `விழியும் இமையும்` என்ற புத்தகம் கட்டுக் கட்டாக
இருந்தது. ஈ வெ ரா வுக்கும் கருணாநிதிக்கும் உள்ள உறவு பற்றிய
புத்தகம் இது. இதை வாங்கி வந்தேன். நிச்சயமாக தமிழ்நாடு
உருப்பட்டுவிடும்.

0 comments:

Post a Comment