வைகோ

புதிய தலைமுறை நேர்காணலைப் பார்த்தேன்.
வைகோ பண்போடு பேசுகிறார்.தோல்விகளால்
துவண்டுவிடவில்லை என்பதைப் பாராட்டலாம்.
ஆனால் அவர் மாறி வரும் சூழலைப் புரிந்துகொள்ளவில்லை
என்றே நான் நினைக்கிறேன். உலகத் தமிழர்களின்
ஆதரவை வைத்துக்கொண்டு தமிழகத்தில் வெற்றி
பெற முடியாது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அரசியலைப் பொறுத்தவரை
ஒரு தளத்தில் பலமாக இருப்பது இன்னொரு தளத்தில்
பலவீனமாக மாறிவிடும். கட்சி நடத்த பணம் தேவை.ஆனால்
பணம் படைத்தவர்களிடம் கட்சி கை மாறி விட்டால்
அதுவே மக்களை கட்சியில் இருந்து அன்னியப் படுத்திவிடும். 1967 இல்
காங்கிரசுக்கும் 2011 இல் தி மு க வுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு
இதுவும் ஒரு காரணம்.

வைகோ வைப் பொறுத்தவரை ஈழத் தமிழர் பிரச்சினையில் தீவிரமான
நிலைப்பாட்டை எடுப்பதால் அவருடைய கட்சிக் காரர்கள்
அவர் மீது அபிமானத்தோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையான
தமிழர்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கத் தயங்குவதற்கும்
இதுதான் காரணம். இந்த சிக்கலை விடுவித்தால் அவருக்கு
வெற்றி கிடைக்கலாம். அரசியலில் அடிப்பவனை விட
அடி வாங்குபவனுக்கே அதிக வோட்டு விழும்.

0 comments:

Post a Comment