ஞாநி


ஞானி விஷயத்தில் ஒரு தப்பு நடந்துவிட்டது.
நி போடுவதற்குப் பதிலாக னி போட்டுவிட்டேன்.
உங்களுக்குத் தெரியுமா? நான் ஞாநியைச் சந்தித்தபோது
கேட்ட முதல் கேள்வி.நீங்கள் எந்த னி என்பதுதான்.
அதிகப் பழக்கம் இல்லை.ஆனால் நல்ல மனிதர்
என்று சொல்லுவேன்.பெசன்ட் நகர் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்
நடந்தது.ஒரு பெண் குழந்தை. வளர்ச்சி குன்றிய குழந்தை.
யாரோ விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். காலையில்
வந்த குழந்தை மாலை வர
ை அந்தப் பந்தலில் விளையாடிக்
கொண்டிருந்தது. எனக்கு கும்பாபிஷேகம் ஒட்டவில்லை.
கைவசம் ஜூனியர் போஸ்ட் தொலைபேசி எண் இருந்தது.
ஞாநியோடு பேசினேன். உடனடியாக நடவடிக்கை
எடுத்தார்.குழந்தையோடு அண்ணாநகர் உதவும் கரங்களுக்கு போகவும் `
என்றார் ஞாநி. காலையிலிருந்து பரிவோடு குழந்தையை பார்த்துக்
கொண்டிருந்தவர் நண்பர் ஹரி.தொப்பை குலுங்கக் குலுங்க
பந்தலில் குழந்தையோடு ஓடிக்கொண்டிருந்தார்.பிரியும்போ
து அவர்
அழுதுவிட்டார்.
அண்ணாநகர் போனேன்.குழந்தையோடு என்னைப் புகைப்படம் எடுத்துக்
கொண்டார்கள்.குழந்தை எந்தச் சலனமும் இல்லாமல்
இந்தத் தோளில் இருந்து அந்தத் தோளுக்கு மாறிவிட்டது...

இரண்ட
ு நாட்களுக்குப் பிறகு உதவும் கரங்களில் இருந்து
போன் வந்தது. தாய் தகப்பன் வந்து அழைத்துப் போய்விட்டார்களாம்.
`இந்த மாதிரி நடப்பது உண்டு` அவர்களே தொலைத்து விடுவார்கள்.
பிறகு மனசு கேட்காது. வந்துவிடுவார்கள் ` என்று எனக்கு சொல்லப்பட்டது.

0 comments:

Post a Comment