கல்கி / சுப்பு / 08 ஜனவரி 2012
“
உலகத்திலே முட்டாள்தனங்களுக்குள் எல்லாம் முதல் பாக்கு வெற்றிலை வாங்கக்
கூடிய முட்டாள்தனம் ஒன்று உண்டென்றால், அது அவ்வப்போது தமிழ் நாட்டில்
சிலரால் நடத்தப்படும் ‘ஆரியர்-தமிழர்’ என்னும் கிளர்ச்சியாகும் “ என்று
பேராசிரியர் கல்கி ஒரே போடாய்ப் போட்டார். இதைச் சொல்லி எழுபத்தைந்து
வருடங்களாகி விட்டன.
ஆரிய-திராவிட இனவாதத்தை முறியடிக்கும் முயற்சிதான் ராஜீவ் மல்ஹோத்ராவும் ,அரவிந்தன் நீலகண்டனும் எழுதிய “Breaking India”
இதை “உடையும் இந்தியா” வாகக் கொடுத்திருக்கிறார் அரவிந்தன்.
763 பக்கங்களுள்ள புத்தகத்தின் பிற்சேர்க்கை 216
பக்கங்கள் . முதலில் மிரட்டலாகத் தெரிந்தாலும் இதில் எதையும் தவிர்க்க
முடியாது என்பது பின்னர் புலப்படுகிறது. தனுஷ் பாணியில் சொல்வதென்றால், ‘ பார்த்தவுடனே பிடிக்காது; பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்’.
பேராசிரியர் கல்கி அம்மையப்பனைச் சுற்றி வருவது போலச் சுலபமாகச் சொல்லி விட்டார். அரவிந்தனுக்கோ அகில உலகச் சுற்று.
சில
மேற்கத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்திய அரசியல் சமூகப் போக்கைக் கட்டுப்
படுத்துகின்றன. அல்ல மிகக் குறைந்து மதிப்பிட்டாலும் கூட இந்தியாவின்
அரசியல் சமூகப் போக்கினைப் பாதிக்கின்றன. என்று இந்தப் புத்தகம்
நிரூபிக்கும்
என்கிறார் அரவிந்தன்.
கிருத்துவ
இறையியலுக்கு விசுவாசமாகவும், காலனிய சுரண்டலுக்கு வசதியாகவும் ,
இனவரையியல் என்கிற அறிவியல் துறை வளைக்கப் பட்டது. என்பதையும், ஆரியர்
மூக்கு திராவிடர் மூக்கு என்கிற கோட்பாடு மூக்குடைபட்டதையும் படிக்கும்
போது இவர்கள் எத்தனை காலமாய் ஏமாற்றினார் என்பது புரிகிறது. மொழி
அடையாளத்தை இன அடையாளமாக திரித்த கால்டுவெல்லின் கடையாணி கற்றி விடப்
பட்டுள்ளது.
‘உடையும் இந்தியா ‘வில் ஒரு கருத்து ஏற்புடையதாக இல்லை. இலங்கையில் ஏற்பட்ட போருக்கும் படுகொலைக்கும் ஐரோப்பியர்கள் உருவாக்கிய இனவாதம்தான்
காரணம் என்கிறர் இவர். இது நிகழ்கால அரசியலையும் தமிழ் நாட்டுத்
தடுமாற்றாங்களையும் அவதானிக்காமல் சொல்லப் பட்டிருக்கிறது.
ஒரு தவறுக்கு அரவிந்தன் இடம் கொடுக்கவில்லை; அதைக் கட்டாயம் சுட்டிக்காட்ட வேண்டும். அது இஸ்லாமியர் குறித்த பார்வை.
பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் தாங்கள் வாழும் பிராந்தியக் கலாசாரங்களில் வேர் கொண்டவர்களாக இந்திய சமூகத்துடன் ஒருங்கிணைந்தவர்களாக, தங்கள் சக ஹிந்துக் குடிமக்களிடம் நல்லுறவு கொண்டவர்களாக உள்ளனர்.
என்பதை இவர் பெருமிதத்துடன் பதிவு செய்கிறார்.
இதை
வலுப்படுத்த ஒரு உதாரணம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த
கிரிக்கெட் போட்டியின்போது இர்ஃபான் பதான், யூசுஃப் பதானுடைய தாய்
தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்று
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ததாக அவர் கூறினார்.
இந்த உணர்வு இருக்கும்வரை உடையாது இந்தியா.
உடையும் இந்தியா?
ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன்
கிழக்கு பதிப்பகம். ரூ 425/-
0 comments:
Post a Comment