ஆரியத் தமிழன்

அறிமுகம்: ஆரியத் தமிழன். விவரமான ஆசாமி.
கும்பகோணத்தில் பேச வந்த என்னை கூட்டம்
முடிந்த பிறகு கடத்திக் கொண்ட போனார்.
அன்பான உபசரிப்பு.நிறைவான குடும்பம்.
ஜாக்ரதை ,ஸ்வப்னம்,சுஷுப்தி மூன்று
நிலைகளிலும ஹிந்து சமூகத்தைப்
பற்றியே சிந்திக்கிறார் என்பதைக் கண்டேன்.

காலை எழுந்தவ்டன் மாடிக்கு அழைத்துப் போனார்.
நான் எதிர்பார்க்கவில்லை.இந்த இடத்தில் இப்படி
ஒரு அறிவுப் புதையல்.அழகாக அடுக்கி ,நூல் நிலையம்
போல நோட்டுப் புத்தகத்தில் வகை வகையாக
ஆயிரக்கணக்கான புத்தகங்கள் என்ட்ரி.
ம பொ சி க்கு தனி அலமாரி. ம பொ சி புத்தகம்
ஒன்றைத் தேடி அவருடைய மகள் வந்தாராம். வைணவம்
பற்றிக் கேட்டால் வகுப்பு எடுக்க ஆரம்பித்து விடுகிறார்.
அரசியலில் அ முதல் இல் வரை இருக்கிறது. ஆ த இருக்கும்
இடத்தில் புத்தகம் என்பது அனாவசியம்.எல்லாவற்றையும்
அவரே சொல்லிவிடுகிறார்.

அவர் கொடுத்த பத்தகங்களை ஓடும் ரயிலில் படித்தேன்.
அதற்கு நன்றி சொல்வதா அவருடைய இல்லத்தரசி
கட்டிக் கொடுத்த கொத்தமல்லி சாதத்திற்கு நன்றி சொல்வதா
என்று முடிவு செய்வதற்குள் தாம்பரம் வந்தவிட்டது.
ஆ த வை சந்திக்க விரும்புகிறீர்களா? ஆக 19 முகாமுக்கு
வாருங்கள்.

0 comments:

Post a Comment