தாராசிங் ஆத்மா சாந்தி அடைய ...


அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
என்னுடைய அண்ணன் நாராயணசாமி ஆட்டோக்ராப் புத்தகம்
வைத்திருந்தார். அண்ணன் என்றால் பெரியப்பா பையன் என்பதைக்
குறித்துக் கொள்ளவும். அண்ணனுடைய ஆடோக்ராபில் மல்யுத்த
வீரர்கள் கிங் காங் மற்றும் தாரா

சிங் உடைய கையொப்பம் இருப்பதாக
அண்ணன் பெருமையடித்துக் கொண்டார். மல்யுத்த வீரர்களின்
கையொப்பமும் குண்டு குண்டாக இருக்குமா என்பது என்னுடைய
ஐயப்பாடு. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்.அண்ணன் அதை
என் கண்ணில் காட்ட வில்லை. ஒரு நாள் அண்ணன் இல்லாதபோது
அவருடைய அலமாரியில் இருந்து அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தால்
ஏமாற்றம். தாரா சிங் கையொப்பம் ஹிந்தியில் இருந்தது.கிங் காங் ஏதோ
ஒரு மொழியில். அளவு என்னவோ சிறியதாகத்தான் இருந்தது. இதைக்
காட்டாமல் அலட்டிக் கொண்ட அண்ணனுக்கு நம்முடைய எதிர்ப்பைத்
தெரிவிக்க வேண்டுமே? மீதி இருந்த பக்கங்ககளில் எல்லாம் என்னுடைய
கையொப்பத்தை நிரப்பிவிட்டேன். அண்ணன் வந்து, பார்த்து கோபப்பட்டான்.
`பிற்காலத்தில் நான் பெரிய ஆளாகி விடுவேன். அப்போது நீ வந்து கேட்டால்
எனக்கு நேரமிருக்காது. அதனால்தான்..`. என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டேன்.
அன்று முதல் தலைவராக வேண்டும் என்ற என்னுடைய முயற்சி தொடர்கிறது.
தாரா சிங் ஆத்மா சாந்தி அடையட்டும்.

0 comments:

Post a Comment