நடிகர் ராஜேஷ்

இன்றைய தினமணி நடுப்பக்கம் பார்க்க: கலா ரசிகன் எழுதும்
இந்த வாரம் பகுதியில் திரைப்பட நடிகர் ராஜேஷ் எழுதிய
`ஜோதிடம் -புரியாத புதிர்` புத்தகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நானும் துக்ளக்கில் எழுதும் தொடரில் ராஜேஷின் கட்டுரைகளைப்
பற்றி எழுதியுள்ளேன். சில நேரங்களில் ராஜேஷோடு தொலைபேசியில்
உரையாடும்போது போனில் குறிப்பெடுக்கும் வசதி இல்லையே என்று
நினைப்பேன்.ஆங்கில இலக்கியம்,மார்க்சியப் பொருளாதாரம் ,உள்ளூர்
அதிசயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேதிகள் வந்து விழும். சில விஷயங்களில்
சினிமாக்காரர் என்பதாலேயே சமூகம் சிலாகிப்பது உண்டு. உதாரணத்துக்கு
கமல் ஹாசனின் கவிதைகள். இதற்கு எதிர்மறையான விளைவுகளும் உண்டு.
சினிமாக்காரர் என்பதால் அறிவுலகம் மரியாதை கொடுக்க மறுக்கிறது.
ராஜேஷின் அறிவுத் திறன் அறியப்படவில்லை.சித்தார்த் பாசு நடத்திய
பி பி சி க்விஸ் நிகட்சியில் நடிகை கஸ்தூரி இறுதிச் சுற்று வரை வந்தார்
என்பது தெரியுமா?.கஸ்தூரி பற்றிய வேறு சில விஷயங்களுக்கு
வாராவாரம் ஒரு புலனாய்வு இதழின் பக்கங்கள் வீணடிக்கப்பட்டன.

0 comments:

Post a Comment