சிம்ரன்


நேற்று சூர்யா. இன்று சிம்ரன். அனுஷ்கா இல்லையா என்று
அடிக்கவரக் கூடாது. நேரடி அனுபவம் மட்டுமே இங்கே
எழுதப்படும்.
பத்து வருடங்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கத்தில்
உள்ள ஹோடேலில் நானும் நண்பர் காசிநாதனும்
சாப்பிடுக்கொண்டிருந்தோம். காசிக்குப் பின்னால் அடடே
மேக்கப் இல்லாத சிம்ரன்.அப்படியும் அழகாதான்
இருந்தாங்க.காசி கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி என்று நான்
நினைத்ததால் அவரிடம் சொல்லவில்லை.
சாப்பிட்டு முடித்து அலுவலகம் போனோம்.
ஹாலில் உரத்த குரலில் `இன்னைக்கு யாரைப்
பார்த்தேன் தெரியுமா?` என்று நான் ஆரம்பித்தேன்.
`சிம்ரனை` என்று காசி முடித்துவிட்டார்.` எப்படி காசி`
என்று நான் தடுமாறினேன்.`சார் உங்களுக்கு பின்னால்
ஒரு கண்ணாடி இருந்தது. நீங்க ஜொள்ளு பார்ட்டி என்பதால்
நான் சொல்லவில்லை `.என்று காசி முடித்துவிட்டார்.
சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த திருவாரூர் பாபு
இப்போது சினிமா இயக்குனர்.ஏதாவது படத்தில் இந்தக்
காட்சியை அவர் சேர்த்துவிடும் அபாயம் உண்டு.

0 comments:

Post a Comment