சித்ரகுப்தனின் நோட்டுப்புத்தகம்


இன்னொரு அறிமுகம்: இந்த நண்பருடைய மகள் திருமணம்.
மாலை வரவேற்புக்குப் போயிருந்தேன். தடுக்கி விழுந்தால்
தமிழறிஞ்சர்கள், பேச்சாளர்கள்,பிரமுகர்கள்.என்னால் அங்கே
ஓட்ட முடியவில்லை.காரணம், சுனாமி.தமிழ்நாட்டை சுனாமி
தாக்கிய இரண்டாம் நாள் அது.
சென்னை பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோவிலில் சமைத்து
உணவை எடுத்துக் கொண்டுபோய் மகாபலிபுரம் அருகில் உள்ள
கிராமங்களில் கொடுத்து வந்தோம்.அந்த வேலையில் ஒரு
தடங்கல் ஏற்பட்டுவிட்டது.` கோவிலில் உள்ள அரிசியை நிவாரணப்
பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது ` என்று ஒருவர் எதிர்ப்பு
தெரிவித்து விட்டார். நண்பர்கள் அவரைத் தட்டி விடலாம் என்றார்கள்.
எனக்கு உடன்பாடில்லை.அந்தக் கவலையோடுதான் இந்த
வரவேற்புக்கு வந்தேன்.
பெண்ணின் திருமண மிதப்பில் இருந்தாலும் , மதியூகி என்ற முறையில்
என்னுடைய தவிப்பை நண்பர் புரிந்து கொண்டார்.
விசாரித்தார்.சொல்லிவிட்டேன்.` நீ சாப்பிட வேண்டாம். புறப்பட்டு`என்று
சொல்லி என் சட்டைப் பையில் ஒரு கவரை வைத்தார்,..

என்னுடைய பிரச்சினை தீர்ந்துவிட்டது, கோவில் கரும்பலகையில்
சுனாமி நிதி என்று எழுதினேன். முதல் பெயர் சுகி சிவம். மறுநாளுக்குள்
பணம் சேர்ந்துவிட்டது.
சிவத்தின் இந்த குணம் இன்னும் பரவலாக அறியப்படவில்லை.
அறநெறி என்று நினைப்பதால் விளம்பரத்தை அவர் விரும்புவதில்லை.
அறிமுகப் பேச்சாலர்களுக்கான தொகையை அவரே கொடுத்து சில
மேடைகளில் பேச வைத்திருக்கிறார்...

பூந்தமல்லி அருகே உள்ள ஒரு கிராமத்துக் கோவிலில் என்னுடைய உறவினர்
ஒருவர் உழவாரப் பணி செய்து கொண்டிருந்தார்.அந்தக் கிராமத்தின்
முக்கிய பிரச்சினை தான் இன்றைய தமிழகத்தின் முக்கியப் பிரச்சினை.
அது டாஸ்மாக்.நாள் முழுதும் வேலை செய்து கிடைக்கும் கூலி, பெண்டு
பிள்ளைகளுக்குப் போய்ச்சேராது.இவர்களுக்கு அறிவுரை சொல்லவேண்டும்
என்று நினைத்து அவர் என்னிடம் வந்தார்.` குடியின் தீமை பற்றி யாராவது
பேசவேண்டும்.ஆனால் செலவு செய்ய முடியாது ` என்றார்.

நண்பர்களை நம்பித்தான் நான் பொதுப்பணியில் இறங்கியிருக்கிறேன் என்ற
உள்விவரத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.குடியை ஒழிக்கும் குழுவில்
பத்து பேர் சேர்ந்துவிட்டார்கள். அந்தக் கிராமத்தில் சிவத்தின் இதயபூர்வமான
உரை நிகழ்த்தப்பட்டது. தொலைகாட்சி செய்தி அதிகாரி லோகேஸ்வரி வேலைகளை
இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.இசைக் கவி ரமணனின் அப்பா அனந்த ராம செஷன்
ஒரு வேத வித்து. அவர் மனைவியோடு வந்து உற்சாகத்தோடு கலந்து கொண்டார்.
நாம, மோடிவேஷனோடு சரி.

திரும்பி வரும் வழியில் கட்டு சாதக் கூடையைப் பிரித்தோம். குடிப்பழக்கம்
குறைந்ததா என்று தெரியவில்லை. ஆனால் சித்திர குப்தன் நோட்டுப் புத்தகத்தில்
சுகி சிவம் என்ற பக்கத்தில் வரவு வைத்துக் கொண்டதாகக் கேள்வி.

0 comments:

Post a Comment