இது விஜகாந்த் இல்லை

இன்று காமராஜர் பிறந்த நாள்:

ம வெ சிவகுமார் பிரபலமான் சிறுகதை எழுத்தாளர்.
இவர் காமராஜரைப் பற்றி என்னிடம் சொன்னது இது.
1968 ஆம் ஆண்டு. தி மு க ஆட்சி.சென்னை நகரத்தில்
மாணவர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும்
மோதல் ஏற்பட்டது. அமைச்சரான கருணாநிதி
போக்குவரத்து ஊழியர்களை ஆதரித்தார். இதனால்
கோபமடைந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்
`கருணாநிதி ஒழிக, ஆட்சியை மாற்றுவோம்` என்று
கோஷம் போட்டுக்கொண்டு காமராஜ் வீட்டுக்கு
ஊர்வலமாகப் போனார்கள்.காமராஜ் வெளியே
வரவில்லை . `வந்து இரண்டு வார்த்தை பேசுங்க`
என்று சிலர் உள்ளே போய் கேட்டுகொண்டார்கள்.
வெளியே வந்த காமராஜ் `படிக்கரதுக்குதான்
உங்க பெற்றோர்கள் பணம் கட்டியிருக்காங்க.
போய் படிக்கிற வழியைப் பாருங்க` என்று
சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.
மாணவர்கள் கலைந்து சென்றனர்.
அவர் அந்தக் கூட்டத்தை உசுப்பேத்தி இருந்தால்
நாலு பஸ் உடைக்கப்பட்டிருக்கும் .தடியடியில்
மாணவர் ரத்தம் சிந்தியிருக்கும். விடுதலைப் போரில்
தன்னுடைய ரத்தத்தை சிந்திய தலைவனுக்கு
மாநில அரசியலுககாக மற்றவர் ரத்தத்தை
சிந்தத் தெரியவில்லை.

 
என்னுடைய நண்பன் தெய்வசிகாமணியின் அனுபவம் இது:
1967. தி மு க ஆட்சி. சென்னையில் நடந்த காங்கிரஸ் ஊர்வலத்தில்
கலவரம், தடியடி. ஊர்வலத்தில் வந்தவர்கள் அண்ணா சிலை மீது
செருப்பு வீசியதாக தி மு க தரப்பில் சொல்லப்பட்டது.
போலீஸ் வன்முறையை கண்டித்து கவிஞ்சர் கண்ணதாசன்
தலைமையில் மௌன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில்
தெய்வசிகாமணி கலந்து கொண்டார். காமராஜர் அண்ணா சிலைக்கு
கீழே நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் `காமராஜருக்கு
ஜே ` என்று தெய்வசிகாமணி குரல் கொடுத்தார். உடனே விழுந்தது
ஒரு அறை. `மௌன ஊர்வலத்தில இவன யார் சேர்த்தது?
என்று சொல்லி அடித்தவர் காமராஜர். ஒரு வார காலத்துக்கு
`காமராஜர் என் கன்னத்தில அடிச்சாரு ` என்று தம்பட்டம்
அடித்துக்கொண்டார் தெய்வசிகாமணி.
இவரைப்போல் இன்னொரு தலைவர் வருவாரா?

0 comments:

Post a Comment