டபுள் ரோல் கனவு

 

எனக்கு அடிக்கடி  ஒரு கனவு வரும். கனவில் நான் பிணமாக 
இருப்பேன்.அந்தப் பிணத்திற்கு நான் தீ மூட்டிக் கொண்டு இருப்பேன்.
இப்படி கனவில் டபிள் ரோல் செய்தவன் நானாகத்தான் இருப்பேன்.
இது விசித்திரமாக இருந்தது. இன்னொரு வகை கனவிலும் 
நான் பிணமாக இருப்பேன். அந்தப் பிணத்தை வழக்கம்போல் 
டபுள் ரோலில் நான் பார்த்துக்கொண்டிருப்பேன்.சில பேர்
 அழுவார்கள்.சிலர் எனக்கு நெருக்கமானவர்களாக
 காட்டிகொள்வார்கள். நான் அப்போது சிரித்துக் கொள்வேன்.
சிரிப்போடு விழித்துக் கொள்வேன்.இப்படியெல்லாம் தொடர்ந்த 
டபுள் ரோல் பிணக் கனவுகள் ஒரு பெரியவரை சந்தித்தவுடன் 
ஸ்டாப் ஆகி விட்டன. இப்போதெல்லாம் நனவில் மட்டும்தான் 
டபுள் ரோல்.

0 comments:

Post a Comment