மாம்பழ மாகாத்மியம்


ஒரு வார பயணம். ஸ்ரீரங்கத்தில் ஜாகை.இரண்டு முறை புதுக்கோட்டை போய் வந்தேன்.
முதல் முறை புவனேஸ்வரி கோவில்,கீழப்பனையூர் காமாக்ஷி அம்மன் கோயில் 
போனேன். இது தவிர சில சமாதிகள்.இதில் எச்சில் பொறுக்கி சாமிகளைப் 
பற்றியும் வெள்ளை வேட்டி சாமிகளைப் பற்றியும் பிறகு விவரமாக எழுத 
வேண்டும்.இரண்டாவது புதுக்கோட்டை விஜயத்தில் ஞானாலயா நூல் 
நிலையம்.இங்கே படிப்பது ஒரு சாக்கு.நண்பர் க்ரிஷ்ணமுர்த்தியிடம் பேசுவதே 
ஒரு இனிய அனுபவம்.இவரைப் பற்றியும் எழுதவேண்டும். இவருடைய 
மனைவி டோரதி ஒரு கிறிஸ்துவர். தவறாமல் மாரியம்மன் கோவிலுக்குப் 
போகிறார்.
விருந்தாளி வந்த சந்தோஷத்தில் உறவினர் ரமணா தாத்தாச்சாரியார் 
தோட்டத்திற்குப் படையெடுத்து விட்டார். மூணு வேளையும் மாம்பழம்தான்.
பெங்களூரில் இருந்து வந்தார் ரமணாவுடைய நண்பர்.அவர் தருமபுரி மாம்பழம் ஒரு 
கூட்டை எடுத்து வந்தார். எப்படியோ தப்பி சென்னை வந்து சேர்ந்தால் வீட்டில் 
கால் வைக்க இடமில்லாமல் விஜயவாடா ரசாலு.போன ஜென்மத்தில் மாம்பழம் 
கேட்டு பராசக்தியை நச்சரித்திருக்கிறேன். இப்போது அவளுடைய லேட் கட்.

0 comments:

Post a Comment